Friday, Jan 17, 2025

தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

By jettamil

தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தின் தெற்கு பகுதியில், யாலா மாகாணத்திற்கு செல்லும் சுற்றுலா பேரூந்தானது விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாங்காங் அருகே இருந்து யாலா மாகாணத்திற்கு சென்றுகொண்டிருந்த குழுவின் பேரூந்து, சூரத் தானி மாகாணத்தில் உள்ள சாலையின் வளைவைக் கடக்கும் போது மரத்துடன் மோதியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக போலீசார் விரைந்து செயல்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு