வடமராட்சிக் கடற்பரப்பில் அடுத்தடுத்து கரையொதுங்கும் ஆமைகளின் உடலங்கள்!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் இன்று ஆமை ஒன்று இறந்த நிலையில் உருக்குலைந்து கரையொதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் சீற்றம் மற்றும் கொந்தளிப்பான காலநிலை காரணமாக, கடலில் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து இவ்வாறு கரையொதுங்குவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆமைகளைப் பிடிப்பதோ அல்லது அதன் இறைச்சியைப் பயன்படுத்துவதோ சட்டவிரோதம் என்பதால், கரையொதுங்கிய ஆமைகளின் உடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் கடற்கரையிலேயே கிடக்கின்றன. இதனால் அவை துர்நாற்றம் வீசுவதுடன், உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.





