சற்றுமுன் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு.. 14 பேர் வைத்தியசாலையில்..!
ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸ் மேற்க்கொண்டு வருகின்றனர்.