Welcome to Jettamil

புனரமைக்கப்படாத பாடசாலை வீதி! போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள்

Share

புனரமைக்கப்படாத பாடசாலை வீதி! போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் பாரதிபுரம் கிராமத்திலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத்தருமாறு வலியுறுத்தி காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை (09) காலை ஏற்பாடு செய்திருந்தனர்.

சுமார் 600 மீற்றர் தூரம் கொண்ட பாரதிபுரம் பாடசாலை வீதியானது பிரயாணம் மேற்கொள்ள முடியாமல் பள்ளமும்,குழியுமாக காணப்படுகிறது.

அரசியல்வாதிகளின் நடவடிக்கை

இதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தி பிரயாணம் மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் அசௌகரிகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது நல்ல அரசாங்கம் ஒன்று அமைந்துள்ளமையினால் அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாடசாலை வீதியை புனரமைத்து தருமாறு மூதூர் -பாரதிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கியாஸ் ஷாபி

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை