Welcome to Jettamil

நாட்டில் சீரற்ற காலநிலை: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு!

Share

நாட்டில் சீரற்ற காலநிலை: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு!

இலங்கைக்குக் கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஒக்டோபர் 21, 2025) தெரிவித்துள்ளது.

இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த மழைக்கான எச்சரிக்கை:

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பொது மக்களுக்கு அறிவுறுத்தல்:

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை