Friday, Feb 7, 2025

கிளிநொச்சியில் வாக்களிப்பு ஆரம்பம்: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்

By jettamil

இலங்கையின் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (14) காலை 7.00 மணிக்கு நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகின்றனர்.

இந்த மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது, இதில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், தேர்தல் பணியில் 1,863 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 396 பொலிஸார்கள் பணியாற்றுகின்றனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு