இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் கிறிஸ்டி பிரவுன் எனும் 32 வயதுடைய பெண், இவருக்கு ஏற்படும் பிரச்சினை ஆனது சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.
இந்த பெண் ஒரு வகையான அபூர்வமான மூளை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இவர் எந்த உணர்ச்சியானாலும் அவை கோபம், சிரிப்பு, பயம் அல்லது யாராவது கவர்ச்சியாக இருந்தால் கூட உடனே மயங்கி விழுந்து விடுவார்.
குறிப்பாக இந்த கிறிஸ்டி பெண் வெளியே செல்லும் போது கவர்ச்சியான ஆண்களை பார்க்கிறார் என்றால் அடுத்த நொடியே இவர், அதே இடத்தில் மயங்கி விழுந்து விடும் விபரீதம் நடந்துள்ளது.
இந்த நிலை காரணமாகவே கிறிஸ்டி வெளியே செல்வது இல்லையாம்.
அதிக அவசியம் என்ற காரணத்திற்காக இவர் வெளியே சென்றால், யாரையும் தலை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையைக் குனிந்தபடியே தான் செல்வது வழக்கமாம்.
இந்த விடயம் குறித்து பேசிய கிறிஸ்டி, ”இந்த பிரச்சனை எனக்கு அதிக மன உளைச்சலைக் கொடுக்கிறது, என்னால் மற்றவர்கள் போல சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை.
ஆனால் இந்த பிரச்சனையில் ஓர் நன்மையும் உள்ளது. யாராவது என்னிடம் சண்டை போட்டால், நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தவுடன் நான் உடனே மயங்கி விழுந்து விடுவேன். அந்த சண்டையும் ஓய்ந்து விடும்” என்று கிறிஸ்டி வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.