வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில் நான்காம் நாள் கந்தசஷ்டி விரதத்தின் காலை (17.11) உற்சவ பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.
இதன்போது அலங்காரக் கந்தன் உள்வீதியுடாக செந்தாமரைப்பீடத்தில் வீற்று காட்சியளித்தார்.
இவ் உற்சவகிரியைகளை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ வைகுந்தகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள்
நடாத்திவைத்தனர்.
கந்தசஷ்டி விரத நான்காம் நாள் உற்சவத்தில் பலபகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திபெற்றுச் சென்றனர்.










