முள்ளியவளை நரசிங்கர் கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை! CCTV-யில் சிக்கிய திருடன்
முல்லைத்தீவு, முள்ளியவளை – புளியடி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நரசிங்கர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று (13.01.2026) அதிகாலை 02:01 மணியளவில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் உட்புறமாக வைக்கப்பட்டிருந்த பெரிய உண்டியலை உடைத்த கொள்ளையன், அதிலிருந்த பெருமளவிலான பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
முகத்தை மறைத்தவாறு ஆலயத்திற்குள் நுழைந்து, மிக லாவகமாக உண்டியலை உடைக்கும் காட்சிகள் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.





