விஜய் அரசியலில் ஜெயித்த உடனே உங்களுக்கு மக்கள் மீது திடீர் பாசம் ஏன் வந்தது? என ப்ளூ சட்டை மாறன் அதிரடி கேள்வி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஜோசப் அண்மையில் தனது அரசியல் நகர்வுகளில் பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, லதா ரஜினிகாந்த் மக்கள் நலனுக்காகப் புதிய இயக்கம் ஒன்றை அறிவித்துள்ளார்.
இதனைத் விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், “இப்போது விஜய் ஜெயித்ததும் மக்கள் மீது உங்களுக்கு ஏன் திடீர் பாசம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இதுவரை உங்கள் ராகவேந்திரா மண்டபத்தில் எத்தனை ஏழை மக்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்? உங்க ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா?” எனப் பகிரங்கமாகக் கேட்டுள்ளார்.
இத்தனை காலம் இல்லாத மக்கள் சேவை, விஜய் தேர்தலில் வென்றவுடன் திடீரென முளைத்தது ஏன் என்ற பாணியில் மாறன் முன்வைத்துள்ள கேள்விகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.




