Welcome to Jettamil

இன்று காலை தளர்த்தப்படுகிறது ஊரடங்கு..?

Share

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த  ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், இன்று  பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம், நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று 7 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

இதனிடையே இன்று ஊரடங்குச் சட்டம் குறிப்பிட்ட நேரத்துக்கு தளர்த்தப்ப்படுவதால், இன்று  5 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏ முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6  மணிவரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும் மாலை 6 மணிமுதல் இரவு 11.30 மணிவரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஊரடங்கு முற்றாக நீக்கப்பட்டால், ஏழரை மணிநேரத்துக்கும் அதிகமான மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை