மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
மியான்மரில் இன்று காலை 10.02 மணியளவில் (இந்திய நேரப்படி) ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 127 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 24.92 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 94.97 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை இடையே அமைந்துள்ள பகுதியில் அதிர்வுகள் பதிவானதாகவும் முதன்முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, கடந்த மாதம் 14-ம் தேதி மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.