கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை ஒட்டிய கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, குறித்த பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், இதன் காரணமாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்படை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.