வேலைவாய்ப்பை வழங்குமாறு யாழில் இன்று பட்டதாரிகள் போராட்டம்
வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி, வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இன்றைய தினம், 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இச் சந்திப்பிற்கிடையில், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.