யாழ். காரைநகரில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், காரைநகர் – பண்டித்தாழ்வுப் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்ற குடும்பஸ்தர் ஒருவர், இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (ஒக்டோபர் 23, 2025) உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 3 முதல் 4 தடவைகள் அவருக்கு மூக்காலும் வாயாலும் இரத்தம் வெளியேறியுள்ளது. உடனடியாக அவர் வலந்தலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





