Sunday, Jan 19, 2025

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில்

By jettamil

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதி (IMF) திட்டத்திற்கு தொடர்ந்தும் இணைந்து செயல்படும் என்பதை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் அமாரி கொழும்பு ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது, முன்னாள் ஜனாதிபதி இந்த பாராட்டை தெரிவித்தார்.

அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமம், இலங்கை தொழிலதிபர் ஒருவரின் சொந்தமாக கொழும்பில் உள்ள முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாக மாறியுள்ளது.

இந்த திறப்பு விழாவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல முக்கிய அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு