Monday, Jan 13, 2025

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

By jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லாஃப் எரிவாயு நிறுவனமானது எரிவாயு இறக்குமதி செய்து வழங்குவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

லிட்ரோ எரிவாயு கையிருப்பு போதுமான நிலையில், லாஃப் எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண எரிவாயு கொள்கலன்களை மாற்றும் விஷயத்தில் விரைவில் அரசாங்கம் முடிவெடுக்கும் என கூறினார்.

செப்டெம்பர் மாதம் முதல் லாஃப் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படவில்லை என எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர், இதனால் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் பல வாரங்களாக சிரமப்படுகிறார்கள்.

இதன் காரணமாக, மாபிமாவை சுற்றியுள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கி விநியோகம் முடக்கப்பட்டதாக, அம்பாந்தோட்டை முனையத்தில் எரிவாயு கொண்ட கப்பலில் தாமதம் ஏற்பட்டதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு