பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி போலீஸ் பிரிவில் 80kg. கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து சுற்றிவளைக்கப்பட்ட போது 80 kg கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பூநகரி போலீசார் ஊடக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.