Welcome to Jettamil

புதிர் எடுக்கும் பொங்கல் விழாவுக்கு தென்னிந்திய இயக்குனர் ஆர்.கே. செல்வம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி வருகை

Share

புதிர் எடுக்கும் பொங்கல் விழாவுக்கு தென்னிந்திய இயக்குனர் ஆர்.கே. செல்வம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி வருகை

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தைப்பூச தினத்தினை முன்னிட்டு புதிர்யெடுக்கும் பொங்கல் விழா நிகழ்வு 03.02.2024 அன்று சனசமூக நிலையத்தின் முன்றலில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்திய பட இயக்குனரும், அரசியல்வாதியும், நடிகை ரோஜாவின் கணவரும் ஆகிய ஆர்.கே.செல்வம் கலந்துகொண்டார்..

இதில் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு பகுதியில் தமது விவசாய வயல் நிலங்களில் உற்பத்தியாகிய நெல்மணிகளை அறுவடை செய்து புத்தரிசியாக்கி 32 பானைகள் வைத்து யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு பகுதி மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

கலாச்சார கலை நிகழ்வுகளும், வினோத விளையாட்டுக்களும் இதன்போது இடம்பெற்றன.

இதில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு சமூக அமைப்பினர் மற்றும் அப்பகுதிவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை