கிழக்கு, மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (21) விசேட விடுமுறை! – வடக்கில் வழமைபோல் செயற்பாடுகள்!
தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாட்டின் சில மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 21) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட மாகாணங்கள்: கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம்m ஊவா மாகாணம் ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் சனிக்கிழமை (ஒக்டோபர் 25) நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இன்று விடுமுறை தினமா என்ற குழப்ப நிலை நிலவிய நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் வழமை போன்று கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வட மாகாண மாணவர்கள் வழமை போன்று பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





