மட்டக்களப்பு கொம்மாதுரை விநாயகர் வித்தியாலத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா
மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 உள்ளூராட்சி மன்றங்கள் இணைந்து நடாத்திய மாவட்ட தைப்பொங்கல் விழா இன்று (09) செவ்வாய்க்கிழமை கொம்மாதுரை விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட தைப்பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செங்கலடி பிரதேசசபை செயலாளர் பற்குணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரும் உள்ளூராட்சி ஆணையாளருமான நாகலிங்கம் மணிவண்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ் பிரகாஷ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
முதலமைச்சின் செயலாளர் மணிவண்ணன் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரகாஷ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இன ஐக்கிய தைப் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில் கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.