குளிர்பான போத்தலால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
புறக்கோட்டையில் உள்ள பீப்பிள்ஸ் பாக்கில் அமைந்த ஒரு சிற்றுண்டிச்சாலையில் குளிர்பானம் அருந்தி சுகவீனமடைந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையில், குளிர்பானத்திற்கு பதிலாக, தவறுதலாக சுத்தம் செய்யும் திரவம் அடங்கிய போத்தலை அந்த இளம்பெண்க்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளம் பெண் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி தனது தாயுடன் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றார். அங்கு உணவு கொண்டு, அவர் குளிர்பானம் கோரியுள்ளார். அந்த குளிர்பானத்தை குடித்தபின், அவளுக்கு வாந்தி வரத் தொடங்கியது.
அந்த பெண்ணை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவரை மேலதிக சிகிச்சைக்காக தேசிய தொற்று நோய் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக, அவரது உறவினர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில், டேம் வீதி பொலிஸார் சம்பந்தப்பட்ட சிற்றுண்டிச்சாலை ஊழியர்களின் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அங்கு குளிர்பானம் மற்றும் சுத்தம் செய்யும் திரவம் ஆகியவற்றையும் ஊழியர்கள் அடையாளம் காண முடியவில்லை என்று கூறியுள்ளனர். இதனால், ஒரு ஊழியர் தவறுதலாக குளிர்பானத்திற்கு பதிலாக சுத்தம் செய்யும் திரவம் அடங்கிய போத்தலை கொடுத்துள்ளார்.
மேலும், அந்த சிற்றுண்டிச்சாலையில் இதேபோன்ற சுத்தம் செய்யும் திரவம் உள்ள பல போத்தல்களும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டேம் வீதி பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னெடுத்துள்ளது.