அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையை 2022 ஆம் ஆண்டு நிறைவு செய்வதுடன் 2023 ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2022 அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2023 மார்ச் 24 இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
2023 ஆம் ஆண்டின் முதல் பள்ளித் தவணை மார்ச் 27, 2023 எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.