சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் எதிர்காலத்தில் ஒரு பாண் ஒன்றின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக நிறுவனங்கள் கோதுமை மா இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் காரணமாக 50 கிலோ எடை கொண்ட கோதுமை மா மூட்டை ஒன்றின் விலை தற்போது இருபதாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பல பேக்கரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கேக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.