சூடான் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது.
இந்த மோதல்களினால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக இதுவரை ஆயிரத்து 800 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சூடானில் அதிகார மோதல் இடம்பெற்று வரும் நிலையில், சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழு போரை நிறுத்துவதற்கு இதுவரை உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிடவில்லை.
துணை இராணுவ குழுவினர் சூடானின் ஜனாதிபதி இல்லம், இராணுவத் தளபதியின் இல்லம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.





