அமெரிக்காவில் தொடர்ந்து நான்கு முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டகி மாகாணத்தில் அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
மேபீல்டு நகரத்தில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேல் பகுதி சேதம் அடைந்ததன் காரணமாக பெரிய உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக கென்டகி மாகாண கவர்னர் ஆண்டி பெஷீர் தெரிவித்துள்ளார்.
சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்று பல்வேறு பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் கவர்னர் தெரிவித்துள்ளார்.
கென்டகி பகுதியில் சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என என்று கவர்னர் கூறியுள்ளார்.
இவ் சக்திவாய்ந்த சூறாவளி தாக்குதல்களுக்கு அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய 5 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.
கென்டக்கி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சுழல் காற்று இது எனவும் அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
சுழல் காற்று காரணமாக மேபீல்டு நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.