திங்கட்கிழமை எரிபொருள் தீர்ந்து போகும் – அதிர்ச்சி தகவல் வெளியீடு
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் திங்கட்கிழமைக்குள் எரிபொருள் தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்று ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க, புதிய விநியோக கோரல்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படாததால், திங்கட்கிழமைக்குள் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என அறிவித்தார்.
மேலும், சங்கம் கடந்த காலங்களில் எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றாலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) புதிய முடிவினால், 3% கொடுப்பனவு நீக்கப்படுவதோடு, புதிய சூத்திரத்துக்காக வழங்கப்பட்டுள்ள மாற்றங்களின் விளைவாக விநியோகஸ்தர்களுக்கு வேறு வழியில்லை என்றும் சந்தனநாயக்க கூறினார்.
இந்நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளருக்கு குற்றம் சாட்டிய சந்தனநாயக்க, இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்குமாறு ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.