இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் பல பகுதிகளில், முக்கியமாக இன்று (15) வறண்ட வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலையில் குளிரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.