Welcome to Jettamil

கொரோனாவில் முதலிடத்தில் இந்தியா..!

Share

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று முன்னொருபோதும் இல்லாதவாறு மிக அதிகமாக பதிவாகியுள்ளது.

அங்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனாவின் முதல் அலையைக் விட , தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையின் தாக்கம் அதிகளவில் இருக்கின்றது.

இதன் காரணமாக, கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3 வது இடத்தில் நீடிக்கின்றது.

இருப்பினும் , ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை விட இந்தியா முன்னிலையில் காணப்படுகின்றது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை கணிப்பிட்டு வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரேசிலில் 82,869 பேருக்கும், அமெரிக்காவில் 62,283 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை