Welcome to Jettamil

இலங்கையில் கொவிட் தொற்றால் 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு…

Share

நாட்டில் மேலும் 184 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4 பேரும் 60 வயதுக்கு குறைவான 46 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 964 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 88 ஆயிரத்து 278 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 73 ஆயிரத்து 81 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை