ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை திறக்கப்படவுள்ளதால், அதிகளவான வாடிக்கையாளர்கள் கூடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இதன்போது சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.