ஒரு மாலையும் 03 மாம்பழங்களும் 10 லச்சம் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று வவுனியாவில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
அதாவது, வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் 06ம் நாள் திருவிழா 21ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது இறைவனுக்கு படைக்கப்பட்ட 03 மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை பத்து லச்சம் ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார். கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனவே ஏலத்தில் கிடைக்கப்பெற்ற பணம் ஆலய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.