மசாஜ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 43 வயது பெண்!
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் அத்திட்டிய பகுதியில் “மசாஜ் நிலையம்” என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஒரு விபச்சார விடுதி மீதான சோதனையின் போது, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது, குறித்த விடுதியை இயக்கிய 54 வயதுடைய ரத்மலானைச் சேர்ந்த ஆண் மற்றும் 43 வயதுடைய மடபத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், குறித்த விடுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர் என சந்தேகிக்கப்படுகின்றார்.
தற்போது கல்கிஸ்ஸை பொலிஸ், இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.