அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை படுதோல்வி! 21 மணிநேர இழுபறிக்குப் பின் வெளியேறிய ஜே.டி. வேன்ஸ்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சுமார் 21 மணிநேரம் நீடித்த அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்படிக்கையுமின்றித் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
அமெரிக்கத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கடும் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்ததை அடுத்து, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance) மற்றும் அவரது தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறியுள்ளனர்.





