குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த புதிய திட்டம் ஆரம்பம்!
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமைத்துவத்தில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2025 – 2027 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்திற்கு, குறைந்த வருமானம் பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் துணை நிறுவனங்களின் அரச அதிகாரிகள் ஈடுபட்டு, ஒரு நாடளாவிய வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படுவதுடன், ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலிருந்தும் 50 குடும்பங்களை மேம்படுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.