Welcome to Jettamil

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

Share

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களோடு, பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம், மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், அந்தத் திணைக்களம் தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வட மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மாத்தறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடை 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களோடு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை