ஆண் பெண் இரண்டு குரல்களிலும் பாடி தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் இலங்கை இளைஞன்
மஸ்கெலியா சீட்டன் பிரதேசத்தில் வசித்து வரும் சித்திரவேல் கிஷோர் என்னும் இளைஞன் தனது இனிமையான குரலில் ஆண் பெண் என தனது குரலை மாற்றி பாடி அசத்தியுள்ளார். இவர் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
பாடல் பாடும் திறமையை வளர்த்துக் கொள்ள இவர் பாடிய முதல் பாடல் இதுவாகும். இவரின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா?
இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் இவரது கனவு நிறைவேற எமது வாழ்த்துக்கள்.
இலங்கையில் தமிழ் மாணவ மாணவிகள் பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் திறமைகளையும் சாதனைகளையும் உலகறியும் வகையில் நாம் எமது இணையத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இவ்வாறு பல சாதனைகள் படைத்து வரும் மாணவ மாணவிகளின் தகவல்களையும் எமக்கு WhatsApp (+94 75 055 9346) மூலம் அனுப்பி வையுங்கள். அவர்களின் திறமைகளையும் உலகறிய கொண்டு சேர்ப்பது எமது நோக்கமாகும்.
பாடலை முழுமையாக காண இங்கே கிளிக் பண்ணுங்க – Video