Welcome to Jettamil

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றாதீர்கள் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

Share

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றாதீர்கள் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும், அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துச் சுமுகமாகப் பேச்சு நடத்திப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தர் சிலையைப் பாதுகாப்புக்காகவே அந்தச் சிலை ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கிருந்து எடுக்கப்பட்டது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்ட போதிலும், பொலிஸாரின் தாக்குதலில் இரு பிக்குகள் காயமடைந்துள்ளனர்.

குறித்த விகாரை 1952ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2004ஆம் ஆண்டில் புனித பூமியாக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கில் பழமையான அறநெறிப் பாடசாலையும் இங்கு உள்ளது.

எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டுப் பேச்சு நடத்த வேண்டும். இதனை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது. இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி தீர்வை வழங்க வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை