முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, போதைப்பொருள் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட “பெலியத்த சனா” என அழைக்கப்படும் வீரசிங்க சரத் குறித்து விமல் வீரவன்ச வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விசாரணைக்காக இன்று (அக்டோபர் 12) காலை 10 மணிக்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தான் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தை பொதுவெளியில் வெளியிட்டமை தொடர்பில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவிடம் முறையிடப் போவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகத் தமது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.





