வெளியுறவுகள் அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியுறவுகள் அமைச்சின் பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது வெளிவிவகார அமைச்சு என மாற்றம் செய்துள்ளார்.
இதையடுத்தே, வெளியுறவுகள் அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னைய அரசாங்கங்களில் வெளிவிவகார அமைச்சு என்றே அழைக்கப்பட்டு வந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கமே அதனை வெளியுறவுகள் அமைச்சு என மாற்றம் செய்திருந்தது.