Welcome to Jettamil

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் அகதிகள்

Share

இலங்கையில் இருந்து ஆறு பேர் நேற்று அகதிகளாக தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், படகு மூலம் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனை அருகே 4 ஆவது மணல் திட்டில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

அவர்களை மீட்ட இந்திய கடலோரக் காவல்படையினர், மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ஆண் ஒருவர் அவரது மனைவி மற்றும் கைக் குழந்தையுடனும், பெண் ஒருவர் தனது 12 மற்றும் 6 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுடனும் அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் தமிழக காவல்துறை புலனாய்வுப் பிரிவினர்அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை