மார்கழி மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
கார்த்திகை மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு1,588.4 மில்லியன் டாலர்களாக இருந்தது. அத்தோடு நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராக ஆக காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, 206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், தங்கத்தின் கையிருப்பு 54 சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.