Welcome to Jettamil

கனமழையால் வீட்டின் மீது பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்து பலத்த சேதம்!

Share

கனமழையால் வீட்டின் மீது பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்து பலத்த சேதம்!

பொகவந்தலாவை ஆரியபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 19) பிற்பகல் பெய்த பலத்த கனமழையின் காரணமாக, ஒரு வீட்டின் மீது பெரிய பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டிற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வீட்டில் வசிப்பவர்கள் கொழும்பில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில், இரவு 8 மணியளவில் பெய்த மழையின்போது வீட்டின் பின்னால் கட்டப்பட்டிருந்த பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது என அயலவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், குறித்த வீட்டின் இரண்டு அறைகள் மற்றும் சமையலறை என்பன கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அத்துடன், வீட்டில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடைமைகளும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நோர்வூட் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வடிகாலமைப்புகள் அடைபட்டதால், மழைநீர் நோர்வூட் நகரத்துக்குள் பாய்ந்து, அங்குப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை