Sunday, Jan 19, 2025

வடக்கு – கிழக்கில் கன மழை: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

By jettamil

வடக்கு – கிழக்கில் கன மழை: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கின்றது.

இன்று (10.12.2024) வெளியிடப்பட்ட அறிக்கையில், இவ்வாறு மழை பெய்யும் வாய்ப்பு குறித்த தகவல் தரப்பட்டுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில், குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவிற்கு பலத்த மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின்போது, அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களின் பாதிப்பை குறைக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்குப் பின்பு, டிசம்பர் 11 ஆம் தேதி இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை 10ஆம் தேதி முதல் அதிகரிக்கக்கூடும்.

இந்த பருவநிலை நிலைகளுடன், வடக்கினிடையே பருவப் பெயர்ச்சி நிலைமையின் விருத்தி மேலும் தீவிரமடையக் கூடிய சாத்தியம் உள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு