Friday, Jan 17, 2025

இஸ்ரேலுக்குப் படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

By jettamil

இஸ்ரேலுக்குப் படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பேரில், 13.04.2024 முதல் 30.11.2024 வரை இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வேலைக்காக 4,531 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு இஸ்ரேலுக்கு சென்றவர்கள் 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் புதிதாக தொடங்கப்பட்ட இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் பணியாற்றுவோர் ஆவார்கள்.

இந்த ஆண்டின் டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை இஸ்ரேலிய வேலைகளுக்காக மேலும் 1,802 பேர் செல்ல உள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் வேலை தேடும் நபர்கள், குலுக்கல் முறையின் கீழ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களூடாக மோசடியாக பணம் பெறும் நபர்களையும் குழுக்களையும் பணியகம் கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக, மோசடி அல்லது இலஞ்சம் பெற்றுக்கொள்வதும் அல்லது கொடுப்பதும் இலஞ்ச சட்டத்தின்படி சட்டவிரோதமானது எனவும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருப்பதற்கும், சட்டரீதியாக வெளிநாட்டில் வேலைக்குச் செல்லுமாறும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்பவர்களைப் பற்றிய தகவல்களை, 1989 தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவித்தல் மூலம் பணியகம் எச்சரித்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு