மன்னாரில் மாவீரர் வாரம்: மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கௌரவிப்பு!
மாவீரர் வாரத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (நவம்பர் 20, 2025) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வு விபரம்:இடம்: மன்னார் நகர மண்டபம்
நேரம்: இன்று காலை 10.30 மணி
ஏற்பாடு: மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்புக் குழு
மாவீரர்களை நினைவுகூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. இதில் கலந்துகொண்ட மாவீரர்களின் உறவுகள் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட மாவீரர்களின் உறவுகள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்குக் கௌரவிப்பு வழங்கப்பட்டது.
நினைவாக மரக்கன்றுகள் மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள், மாவீரர் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். மாவீரர் தியாகங்கள் பற்றிய சிறப்புப் பேச்சுகளும் இதன்போது இடம்பெற்றன.









