Welcome to Jettamil

இரட்டைக் குடியுரிமை வந்தால் 22 க்கு வாக்களிப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் – சுதந்திரக் கட்சி

Share

இரட்டைக் குடியுரிமை தொடர்பான நிலைப்பாட்டை குழுவின் போது மாற்றினால், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும்.

விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் நின்றுவிடாமல், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமித்து கையாளுமாறு கோரினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை