ஜனாதிபதி மாளிகையில் இப்தார் பெருவிழா! முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
புனித ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் புதன்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரின் பங்கேற்புடன், மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த நிகழ்வு இனிதே நடைபெற்றது.





