கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த ஒரு தனியார் சொகுசுப் பஸ் இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 22) அதிகாலையில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மதவாச்சி பிரதான வீதியில், ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இந்தக் கோர விபத்து நேர்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான பஸ் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகியதால் விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுச் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





