180-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தளங்கள் தரைமட்டம் – வான்வழித் தாக்குதலால் நிலைகுலைந்த ஹிஸ்புல்லா!
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘Operation Roaring Lion’ இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தது முதல் இதுவரை 180-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்களை (Rocket Launchers) இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்துள்ளன.
இன்று காலை இஸ்ரேலியக் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஏவுதளம் ஒன்றை, தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே இஸ்ரேலிய விமானப்படை (IAF) வான்வழித் தாக்குதல் மூலம் முற்றாகத் தரைமட்டமாக்கியுள்ளது.
இஸ்ரேலியப் படைகள் நடத்திய இந்தத் தீவிரத் தாக்குதல்களில், வழிகாட்டப்பட்ட ஏவுகணைத் தளங்கள் (Guided Missile Sites), கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் நிலத்தடி சுரங்கப் பாதைகள் என டஜன் கணக்கான உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினரால் ஆயுதங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட கிடங்குகள் மற்றும் ஏனைய இராணுவ நிலைகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல் திறனை முழுமையாக முடக்கும் நோக்கில் இஸ்ரேல் இந்தப் பாரிய தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது. லெபனான் எல்லைப் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்கள் வான்வழி உளவுத் தகவல்களின் அடிப்படையில் மிகத் துல்லியமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன.





